News August 11, 2024
கரூரில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை

கரூர் வெங்கமேடு காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் 77 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவர்களை காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன், காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து, இனி எந்தக் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.
Similar News
News November 9, 2025
கரூர் அருகே விபத்து: ஒருவர் படுகாயம்

கரூர், பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முருகேசன்(70). இவர் நேற்று சாலையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அதே சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்து, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 9, 2025
கரூர்: ரூ.7,500 பரிசு… மக்களே உஷார்!

கரூர் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 8, 2025
கரூரில் தட்டிதுக்கிய முன்னாள் அமைச்சர்!

கரூர் மாவட்டம், இன்று (08.11.2025) கரூர் கிழக்கு ஒன்றியம்,
நெரூர் தென்பாகம், என்.புதுப்பாளையம் கிராமம் திமுக-வை சேர்ந்த சி.நாகமணி, எம்.கந்தசாமி,த.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அஇஅதிமுக தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏரளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


