News October 17, 2024

கரூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை, மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்பு முகாம் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் அக்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், நடைபெற உள்ள இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. எனவே வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

கரூர்: டிகிரி முடித்தால் ரூ.35,900 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘Assistant Programmer’ பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.35,900 முதல் ரூ.1,32,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

கரூர்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

image

கரூர்: அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி மேற்கு தடா கோவிலைச் சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஆரியூர் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தபோது தனது பர்ஸ் கிணற்றில் விழுந்ததால் அதை எடுக்கச் சென்று மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 19, 2025

கரூர் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

image

கரூர் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> (அ) அருகில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம். உடனே SHARE!

error: Content is protected !!