News January 8, 2026
கரூரில் பொங்கல் பரிசு ரூ.3,000; முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் வாழும் 3,32,985 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ. 3,000, அரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட ஆரம்பித்துள்ளன. அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், கரூர், புகலூர் உள்ளிட்ட பகுதிகளில், எந்தவொரு புகார்களுக்கும் 1967 (அ) 1800-425-5901 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News January 30, 2026
கரூரில் சோகம்: வாலிபர் பலி

கரூர் கொக்காம்பட்டி டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் போர்டலி (23), பணியின்போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிறுவன மேலாளர் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
கரூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

கரூர் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே<
News January 30, 2026
கரூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


