News January 6, 2026

கரூரில் ஜன.8 முதல் ரூ.3,000 ரொக்கம்!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில் இதற்கான டோக்கன் விநியோகம் இன்று கரூரில் துவங்கியுள்ளது. டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஜன.08ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகங்களுக்கு 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

Similar News

News February 4, 2026

கரூர்: செல்போன் இருக்கா? போலீசார் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.25 லட்சம் மதிப்புள்ள 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த ரூ.97.33 லட்சம் மீட்கப்பட்டு கூடுதல் எஸ்.பி.பிரபாகரன் முன்னிலையில் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கரூர் மக்களே உங்கள் செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் <>இங்கே கிளிக்<<>> செய்து புகாரளிக்கலாம் உடனடியாக உங்கள் செல்பேன் மீட்கப்படும். இதனை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 4, 2026

கரூரில் புதுமாப்பிள்ளை துடிதுடித்து பலி!

image

கரூர் மின்னம்பள்ளியைச் சேர்ந்த குமரேசன் (35), திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், நேற்று மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். பலத்த காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் சிவகாமி அளித்த புகாரில் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

சம்பா நெல் சாகுபடியையொட்டி,குளித்தலை, பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, இனுங்கூர், நச்சலுார், கல்லடை, கே.பேட்டை, நங்கவரம், சின்னபனையூர், கழுகூர், திருச்சாப்பூர், புகழூர் வட்டம் அஞ்சூர் ஆகிய, 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகள் நேரில் சென்று பயன் பெறலாம். மேலும் முறைகேடுகள் குறித்து 18005993540 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் அறிவிப்பு!

error: Content is protected !!