News September 6, 2025
கரூரில் சோழர் கால ஜேஷ்டாதேவி சிறப்பு கண்டுபிடிப்பு

கரூர் அருகே சோழர் கால ஜேஷ்டா தேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில், காசிபாளையம் மாரியம்மன் கோயில் தென்புறத்தில், பழமை வாய்ந்த ஜேஷ்டாதேவி சிற்பம் இருப்பதாக, நிமித்தம்பட்டி பகுதியை சேர்ந்த குமார் என்பவர் கொடுத்த தகவல்படி, தொல்லியல் ஆய்வாளர்கள் அர்ச்சுனன், உத்திராடம் ஆகியோர் சிற்பத்தை கண்டறிந்தனர்.
Similar News
News September 6, 2025
கரூர்: DRIVING தெரிந்திருந்தால்! அரசு வேலை

கரூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 6, 2025
கரூர்: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (செப்டம்பர் 9) அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டங்களில் நடைபெறும் இம்முகாம்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், பென்ஷன், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பலவகை சேவைகள் குறித்த கோரிக்கைகளுக்கு நேரடியாக தீர்வு அளிக்கப்படும்.
News September 6, 2025
கரூரில் செப்.17ல் திமுக முப்பெரும் விழா!

கரூர் மாவட்டத்தில் வரும் செப்.17ல் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி திமுகவினர் கலந்துகொள்ளும் வகையில் உப்பிடமங்கலம் சக்தி மஹாலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளும்படி எம்எல்ஏ சிவகாமசுந்தரி கேட்டுக்கொண்டுள்ளார்.