News December 12, 2025
கரூரில் சோகம்; ரயிலில் அடிபட்டு பெண் பலி

கரூர் மாவட்டம் வெங்கமேடு VPG நகர் ரயில்வே பாதையில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
Similar News
News March 8, 2026
கரூர்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 8, 2026
கரூரில் இருந்து விலகுகிறார் செந்தில் பாலாஜி?

கோவை மண்டல திமுக பொறுப்பாளராகச் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பின், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்றது. இதனால் வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமெனப் பல நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர் கோவை அல்லது கரூர் என எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?
News March 8, 2026
கரூரில் மனைவி, மகள் கழுத்தறுத்துக் கொலை! JUDGMENT

கரூரில் கடந்த 2024-ம் ஆண்டு, குடும்பத் தகராறில் மனைவி கல்பனா மற்றும் 5 வயது மகள் சாரதிபாலாவைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி செல்வகணேஷிற்கு(46), கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. ஆத்திரத்தில் கொடூரச் செயலைச் செய்த செல்வகணேஷை, நீதிபதி தங்கவேல் குற்றவாளி என உறுதி செய்து இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


