News February 11, 2025

கரூரில் ஓட்டுநர் போக்சோவில் கைது

image

கரூர் தோரணங்கல்பட்டி சாலைப் புதூரில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரியப்பன் (31) என்பவர், வீட்டிற்குக் கடத்திக் கொண்டு போய் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் நடந்ததை டவுன் போலீசில் தெரிவித்தார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 12, 2025

கரூர்: சுங்க வரித்துறையில் சூப்பர் வேலை!

image

கரூர் மக்களே மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது, மாதம் ரூ.18,000முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க! யாருக்காவது உதவியாக இருக்கும்.

News November 12, 2025

கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

News November 12, 2025

கரூர்: ராஜவாய்க்காலில் தவறி விழுந்து ஒருவர் பலி!

image

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே நேதாஜி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதாகர் (55), ராஜவாய்க்கால் தடுப்பு சுவரில் அமர்ந்திருந்தபோது தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!