News December 11, 2024
கரூரில் எஸ் பி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு கூட்டம்

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், குற்ற ஆவண காப்பகம், குற்ற பிரிவு, கைரேகை பிரிவு, புகைப்படப் பிரிவு, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணை தலைவர் மனோகர் IPS வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா கலந்து கொண்டார்.
Similar News
News August 19, 2025
கரூர்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

கரூர்: அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி மேற்கு தடா கோவிலைச் சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஆரியூர் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தபோது தனது பர்ஸ் கிணற்றில் விழுந்ததால் அதை எடுக்கச் சென்று மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 19, 2025
கரூர் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

கரூர் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 19, 2025
கரூரில் நாளை முதல் முற்றிலும் இலவசம்!

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Tally Certified Accountant’ பயிற்சி கரூரிலேயே வழங்கப்படவுள்ளது. நாளை(ஆக.20) தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு மொத்தம் 6692 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும், இதில் பயிற்சி பெறுவோருக்கு வேலை வாய்ப்பு உறுதி. இத்தகைய சூப்பர் பயிற்சி குறித்த விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <