News November 15, 2025

கரூரில் உயிரிழந்தவர்களின் வீடுகளில் CBI

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று (நவ.14) கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் 7 பேரிடம் CBI அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று, கரூர் துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரின் வீடுகளுக்கு CBI அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

கனமழை: 10 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

image

<<18295449>>கனமழையை <<>>எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு, 10 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற தகவலை அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 15, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. செப்டம்பரில் 1.54% ஆக இருந்த நாட்டின் சில்லறை பண வீக்கம், அக்டோபரில் 0.25% ஆக குறைந்திருக்கிறது. இதனால், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால், கடன்களுக்கான MCLR புள்ளிகளை வங்கிகள் குறைக்கும். இதனால், உங்களின் EMI குறையும். SHARE IT

News November 15, 2025

5.90 கோடி பேருக்கு SIR படிவங்கள் விநியோகம்: ECI

image

தமிழகத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் SIR படிவங்கள் 5.90 கோடி பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தம் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 92.04% பேருக்கு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. டிச.4 வரை SIR படிவங்கள் வழங்கப்படும்.

error: Content is protected !!