News October 1, 2025
கரூரில் இளம்பெண் கடத்தல்?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், காக்காயம்பட்டியை சேர்ந்தவர் புஷ்பவல்லி 35. இவரது மகள் ஹேமலதா (19) உடன் நேற்று இருசக்கர மோட்டார் வாகனத்தில் பஞ்சப்பட்டி சாலையில் சென்றபோது காரில் வந்த அவரது கணவர் கோகுல்நாத் மற்றும் நண்பர்களான முத்துக்குமார், கமல், ராஜேஷ் ஆகிய 4 பேர் ஹேமலதாவை கடத்தி சென்றதாக புஷ்பவல்லி புகாரில் நான்கு பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 1, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள்!

கரூரில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை (02.10.2025) காலை 10 மணியளவில் தாந்தோணி மலை கதர் அங்காடியில் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின் சிறப்பு விற்பனை துவக்கி வைத்து, மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி 10.15 மணியளவில் திருமுருகன் மஹாலில் (சுங்க கேட் அருகில்) ரிப்பன் வெட்டி கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேல் துவக்கி வைக்க உள்ளார்.
News October 1, 2025
கரூர்: மின்சார துறையில் வேலை – ரூ.59,900 வரை சம்பளம்!

கரூர் மக்களே..தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TANGEDCO) – கள உதவியாளர் வேலைவாய்ப்பு!
கரூர் மாவட்டம் மற்றும் மற்ற பகுதிகளுக்கேற்ப பணியிடங்கள்
1)மொத்த காலியிடங்கள்: 1,794
2)கல்வித்தகுதி: ITI (ஏதேனும் துறையில்)
3)சம்பளம்: ரூ.18,800 – ரூ.59,900 வரை
4)விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி: 02-10-2025
5)விண்ணப்பிக்கவும், முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும் இங்கே <
News October 1, 2025
கரூர்: வடகிழக்கு பருவ மழை குறித்து முன்னெச்சரிக்கை!

கரூர் மாவட்ட தோட்டக்கலை பயிர் செய்திருக்கும் விவசாயிகள், வடகிழக்கு பருவ மழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கரூர் கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில்; பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, தென்னை, பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும், மரங்களின் எடையை குறைக்கும் வகையில், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.