News January 4, 2026
கரூரில் இரண்டாகப் பிரிப்பு: கலெக்டர் அறிவிப்பு!

நிர்வாக வசதிக்காகக் கரூர் மாவட்டத்தின் கடவூர் ஊராட்சி, தற்போது இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்) மற்றும் கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 208-ல் (இரண்டாவது தளம்), ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
கரூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 25, 2026
கரூர்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

கரூர் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கரூர் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04324-255340 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News January 25, 2026
குளித்தலை: வாலிபர் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் தமிழ்ச்சொலையைச் சேர்ந்தவர் செல்வகுமார் (36). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் வயிறு வலியால் துடித்துக் கொண்டிருந்தவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் 10க்கும் மேற்பட்ட ஆணிகளை முழுங்கியது தெரிய வந்தது. தொடர் சிகிச்சையில் அவர் உயிரிழந்தார்.


