News April 27, 2025

கரூரில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு!

image

கரூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, கரூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்தது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

Similar News

News April 27, 2025

கரூர்: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு!

image

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்த மதுவிலக்கு, ஆயத்தீர்வத்துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

கரூர் வட்டாட்சியர் எண்கள்

image

▶️வட்டாட்சியர், கரூர்: 9445000598
▶️வட்டாட்சியர், அரவக்குறிச்சி: 9445000599
▶️வட்டாட்சியர், குளித்தலை: 9445000600
▶️வட்டாட்சியர், கிருஷ்ணராயபுரம்: 9445000601
▶️வட்டாட்சியர், மண்மங்கலம்: 9445461817
▶️வட்டாட்சியர், கடவூர்: 9445461822
▶️வட்டாட்சியர், புகளூர்: 04324-270370
பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!

News April 27, 2025

கரூரில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

image

கரூர்: குளித்தலை அடுத்த மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம்(51). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!