News January 14, 2026
கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடத்திற்கு பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். கரும்பில் உள்ள கால்சியம் சத்து, எச்சிலுடன் கலந்து வேதிவினை ஆற்றுகிறது. அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும்போது, அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கும். இதனால் நாக்கு வெந்து விடும். இதனை தவிர்க்க கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.
Similar News
News February 3, 2026
தனிக்கட்சி தொடங்குகிறாரா சசிகலா?

வருகிற சட்டமன்றத்தேர்தலில் தனது தலைமையில் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார். எதிரிகளையும், துரோகிகளையும் நிச்சயம் தோற்கடிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் சசிகலா தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
News February 3, 2026
அதிருப்தியால் அண்ணாமலை விலகலா?

தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி, தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து <<19037307>>விலகுவதாக <<>>அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், பொறுப்பாளர்கள் நியமனத்தில் நயினார் தன்னிச்சையாக செயல்பட்டதாலும், தனக்கு சம்பந்தமில்லாத தொகுதிகளை ஒதுக்கியதாலும், அதிருப்தியடைந்த அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, இருவருக்கும் இடையே உரசல் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
பிரபல இசையமைப்பாளர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பழம்பெரும் இசையமைப்பாளர் SP வெங்கடேஷ்(70) மாரடைப்பால் காலமானார். கிட்டார் கலைஞராக இசைப் பயணத்தை தொடங்கிய அவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘உனக்காக என் காதல்’, ‘பிஞ்சு மனசு’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ள வெங்கடேஷ், ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. RIP


