News December 28, 2024

கரும்புக்கு ரூ.23 – ரூ.25 வரை உயர்த்தி வழங்க வேண்டும்

image

பன்னீர் கரும்புகள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் 30% கரும்புகள் சேதமாகி இழப்பு ஏற்பட்டதாக விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, 1 கரும்புக்கு ரூ.23 – ரூ.25 வரை உயர்த்தி வழங்க வேண்டும், தரகர்களின்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான், விவசாயிகளுக்கான இழப்பீடை ஓரளவிற்கு ஈடுகட்ட முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 7, 2026

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்த ஆட்சியர்

image

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இன்று (மார்ச்.06) திறக்கப்பட்டது. இந்த விழாவில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு பங்கேற்றனர்.

News March 6, 2026

தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (மார்ச்.06) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.

News March 6, 2026

விழுப்புரம்: சனி தோஷம் நீக்கும் கல்பட்டு சனி பகவான்!

image

சனி தோஷத்தை நீக்கும் புகழ் பெற்ற கோயிலாக உள்ளது விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வரர் கோயில். இங்கு சனி பகவான் 21 அடி உயரத்தில் வலது காலை காகத்தின் மீது வைத்து காட்சி தருகிறார். ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!