News April 29, 2025
கரடியார்: குழந்தை திருமணம் மூவர் மீது வழக்கு

கரடியாரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 2024ஆம் ஆண்டு குழந்தை திருமணம் நடைபெற்றது. தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த போது அவர் 18 வயது பூர்த்தி அடையவில்லை என மருத்துவர்கள் கண்டறிந்தனர். தகவலின் அடிப்படையில் குழந்தை திருமணம் செய்த கலர்புரத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது சகோதரர் முருகேசன், அவரது மனைவி அலமேலு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
விஜயகாந்தின் வாழ்வில் கள்ளக்குறிச்சி

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது அரசியல் வாழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. 2011 சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், 2016 தேர்தலில் உளுந்தூர்பேட்டையில் முதல்வர் வேட்பாளராக களம் கண்ட அவர், தோல்வியடைந்தார். இதனால், அவரது அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.
News August 25, 2025
கள்ளக்குறிச்சி: ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்!

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் வரும் ஆன்லைன் வர்த்தகம், கடன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு புதுப்பித்தல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பணம் இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News August 24, 2025
கள்ளக்குறிச்சி: மாதம் 15,000 சம்பளத்தில் வேலை

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுறிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 21 வயது முதல் 41 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் விருப்பமுள்ளவர்கள் மாதம் ஆகஸ்ட்- 31ஆம் தேதிக்குள் இந்த <