News May 1, 2024
கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

காரமடை, சென்னிவீரம் பாளையத்தில் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமோனியா கசிவால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து வடக்கு ஆர். டி.ஓ.கோவிந்தன், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் ஆகியோர் அமோனியா காஸ் கசிந்த இடத்தில் ஆய்வு செய்த பின் சுமார் 300 கிலோ, அமோனியா காஸ் வேறு ஒரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது
Similar News
News August 24, 2025
கோவை: பாலியல் சீண்டல்.. ஆசிரியர்கள் மீது போக்சோ!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 24, 2025
கோவை: கடன் தீர்க்கும் கால சம்ஹார பைரவர்!

கோவை: பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News August 24, 2025
கோவை: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

கோவை மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <