News December 23, 2025

கம்பம் ஹோட்டல் கொலை விவகாரத்தில் இருவர் கைது

image

கம்பம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சத்தியமூர்த்தி (26) என்பவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு தரப்புடன் ஏற்பட்ட தகராறில் சத்தியமூர்த்தி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் தப்பிச்சென்ற நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொலை செய்த முகிலன் (36), சிபிசூா்யா (24) ஆகிய இருவரையும் நேற்று (டிச.22) கைது செய்தனா்.

Similar News

News December 25, 2025

தேனி: காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

image

பெரியகுளம் பகுதியை சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி விஜயலெட்சுமி. இருவரும் கடந்த 18-ஆம் தேதி சுக்காம்பாறை ஓடைவயல் பகுதியில் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் ராமசாமி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

News December 25, 2025

மதுபோதையில் பெண்ணை தாக்கிய இருவர் கைது

image

பெரியகுளம் கீழ வடகரை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது குடும்பத்தினருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் கருப்பசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கருப்பசாமி மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் மது போதையில் மகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் பெரியகுளம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.

News December 25, 2025

மதுபோதையில் பெண்ணை தாக்கிய இருவர் கைது

image

பெரியகுளம் கீழ வடகரை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது குடும்பத்தினருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் கருப்பசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கருப்பசாமி மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் மது போதையில் மகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் பெரியகுளம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!