News August 5, 2025

கமுதி அருகே 25 ஆடுகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்

image

கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்தபோது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 25 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது. கால்நடை மருத்துவர்கள் உடற்ஆய்வு கூறு செய்தனர். பாதிக்கப்பட்டவர், நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News December 11, 2025

ராமநாதபுரம்: அதிமுக MLA சீட்…. முக்கிய அறிவிப்பு

image

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடி (தனி) , திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் டிச.23க்குள் தங்களது விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (டிச.11) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 11, 2025

ராமநாதபுரம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலைய விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

ராமநாதபுரம்: 4 நாட்களாக மீனவரை தேடும் பணி

image

தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தய்யா. இவரது மகன் ஆரோக்கிய கிங்ஸ் 25, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகில் டிச.,6ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்துள்ளார். மீனவர்கள் அப்பகுதியில் 4 நாட்களாக தேடி வருகின்றனர். இந் நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அமிர்தய்யா குடும்பத்தினருடன் வந்து நேற்று மனு அளித்தார்.

error: Content is protected !!