News August 5, 2025
கமுதி அருகே 25 ஆடுகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்

கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு, பட்டியில் அடைத்து வைத்திருந்தபோது 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 25 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது. கால்நடை மருத்துவர்கள் உடற்ஆய்வு கூறு செய்தனர். பாதிக்கப்பட்டவர், நிவாரணம் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 6, 2025
பாம்பன் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேரையும், தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொள்கின்றனர்.
News August 6, 2025
ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் சாதனை

கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 7ம் வகுப்பு மாணவி நிவேதா ஸ்ரீ, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு நேற்று பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவியை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
News August 6, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டு உள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.