News April 19, 2024
கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு

நெல்லை மாவட்டம் பேட்டை புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடி பதட்டமான வாக்குச்சாவடி என்பதால் கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முன்பாக கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
Similar News
News November 10, 2025
நெல்லை: 500 கிலோ வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் ஆளில்லாத வீட்டில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த ஆளில்லாத வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக 500 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 10, 2025
நெல்லையில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி

தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், ஐஸ்வர்யா ஸ்ரீ கல்வி நிறுவனம், திருநெல்வேலியில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்படும். பயிற்சிக்காலத்தில் மொத்தம் ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ. 11 இறுதி நாள். விபரங்களுக்கு 90250 79679 தொடர்பு கொள்ளவும்.
News November 10, 2025
நெல்லை: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

களக்காடு சிங்கிகுளம் இந்திரா நகரை சேர்ந்த காயத்ரி இந்த மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காயத்ரி கடந்த 5ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கபட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


