News October 26, 2025
கபடி வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை!

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் ரமேஷ்-க்கு பதக்கம் வென்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகையாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 29, 2026
சென்னையில் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

சென்னை மெட்ரோ பணிகளுக்காக தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மண்டலம் 9, 10, 13 ஆகிய பகுதிகளில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் தற்காலிகமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
News January 29, 2026
சென்னை: காதல் கணவன் விபரீத முடிவு

பரங்கிமலையைச் சேர்ந்த கார்த்திக் (21), 6 மாதங்களுக்கு முன்பு பாக்யா என்பவரைக் காதலித்து மணந்தார். அடிக்கடி மதுபோதையில் கார்த்திக் வீட்டிற்கு வந்த போது ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால் மனமுடைந்த கார்த்திக், தனது சித்தியிடம் போனில் தற்கொலை பற்றி கூறிவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 29, 2026
மாதவரம் பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மாதவரம்: கணபதி சிவா நகர், சாஸ்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர், முனுசாமி நகர், ராகவேந்திரா நகர், குளபம்குளம், விஷ்ணு நகர், அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


