News September 21, 2025

கபடி போட்டியை துவக்கி வைத்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

image

கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் குடித்தெருவில், கரூர் பெரியாண்டாங்கோவில் கிளை கழகம் மற்றும் உதயா பிரதர்ஸ் கபாடி குழு இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபாடி போட்டி நேற்று இரவு தொடங்கியது. இந்தக் கபாடி போட்டியை கரூர் சட்டமன்ற உறுப்பினரும், வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News

News September 21, 2025

கரூர்-ஈரோடு இந்த ரயில் செல்லாது!

image

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பின்படி, கரூர்-ஈரோடு ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண்: 56809) செப். 22, 25, 28, 30 ஆகிய 4 நாட்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.20 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்படும் இந்த ரயில், கரூர் ரயில் சந்திப்புடன் நிறுத்தப்படும். அங்கிருந்து ஈரோடு நோக்கிச் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 21, 2025

கரூரில் 6பேர் போலீசாரால் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அண்ணாநகர் சீத்தக்காடு பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சின்னதாராபுரம் போலீசார் ஜெகன் 31, ரஞ்சித்குமார் 29, கார்த்திகேயன் 42, சந்தானம் 40, ஆறுமுகம் 42, அரவிந்த் கார்த்திக் 23 ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ.1230 பறிமுதல் செய்தனர்.

News September 21, 2025

கரூர்: +2 போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

கரூர் மக்களே, மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். இதற்கு செப்.23ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!