News February 2, 2025
கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளர் பலி

பஞ்செட்டி, நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் பிரபாகரன் (38). புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள இரும்பு உருக்கு தொழிற்சாலையில், மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்தார். நேற்று (பிப்.1) பணியில் இருந்த அவர், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் குறுக்கே கடக்க முயன்றபோது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 2, 2026
தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பன்டூர் அடுத்த மணவாளநகர் கே.இ.என்.சி நடேசன் செட்டியார் பள்ளியில் இன்று (மார்ச்.02) பொது தேர்வு நடைபெற்றது. இந்த மையத்தினை ஆட்சியர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளவர்.
News March 2, 2026
நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூர் ஊராட்சி காக்களூர் ஏரி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தலக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் இன்று (மார்ச்.2) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பத்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
News March 2, 2026
திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


