News September 3, 2025
கன்று பேரணியினை தொடங்கி வைத்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சி ஒன்றியம், மேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாபெரும் கன்று பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (03.09.2025) புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Similar News
News September 5, 2025
உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையம் அருகில் உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
News September 5, 2025
கள்ளக்குறிச்சி பெண்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9094055559) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 5, 2025
கள்ளக்குறிச்சி இளைஞனுக்கு திருவாரூரில் கல்யாணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அறிவித்திருந்த அறைக்கூவலின் பெயரில் இன்று செப்டம்பர் 5 கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவருக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜ் தலைமையில் திருமணம் நடைபெற்றது.