News March 22, 2024
கன்னியாகுமரி அருகே விபத்து: ஒருவர் பலி

பேச்சிப்பாறை அருகே வலிய-ஏலா பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற இளைஞர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிணந்தோடு பகுதியில் வைத்து இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 8, 2025
குமரியில் பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அசம்பு, மாறாமலை, காணிப் பெட்டி, மகேந்திரகிரி மலை பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் கடற்கரை உட்பட மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.
News September 8, 2025
குமரியில்: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

குமரி மக்களே,
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 8, 2025
குமரியில் நகை திருடிய பெண்கள் கைது

தம்மத்துக்கோணம் Dr.பகவத்தின் மாமியாருக்கு உடல்நலம் சரியில்லாததால், இவரை உண்ணாமலைகடை சுசீலா பராமரித்து வந்தார். செப்.6 ஆம் தேதி சுசீலா வீட்டுக்கு சென்ற பின்பு Dr. மாமியாரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. சுசீலா நகையை திருடியிருப்பார் என்ற சந்தேகத்தில் அளித்த புகாரின்படி ராஜாக்கமங்கலம் போலீசார் சுசீலா, நகையை மறைத்து வைத்திருந்த அவரது தங்கை சாந்தியை கைது செய்து நகையை மீட்டனர்.