News April 9, 2024

கன்னியாகுமரி அருகே அரிவாள் வெட்டு

image

குமரி: காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த இனிய சுதன் என்பவர் வேலைக்கு செல்லும் வழியில் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். பைக் பாதி தூரம் சென்றவுடன் அந்த நபர் இனிய சுதனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சீயோன் புரத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. அவரை போலிசார் கைது செய்தனர். 

Similar News

News September 18, 2025

கன்னியாகுமரியில் ரூ.1085 கோடியில் திட்டம் தயார்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாயை சீரமைக்க ரூ.1085 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தோவாளை கால்வாய் ரு.189 கோடி, அனந்தனார் கால்வாய் ரூ.186 கோடி, நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் ரூ.189 கோடி, பட்டணம் கால்வாய் ரூ.60 கோடி, திற்பரப்பு கால்வாய் ரூ.15 கோடியிலும் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

News September 18, 2025

குமரியில் காய்ச்சல் காரணமாக மாணவி உயிரிழப்பு

image

குமரி மாவட்டம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜினி தெரசா(22). இவர் திருவட்டார் பகுதியில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News September 18, 2025

குமரி மாவட்ட எஸ்பி பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

image

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வாகன சோதனையின் போது 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் ஓட்டி வந்த ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டது. அந்த இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!