News April 9, 2024

கன்னியாகுமரி அருகே அரிவாள் வெட்டு

image

குமரி: காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த இனிய சுதன் என்பவர் வேலைக்கு செல்லும் வழியில் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். பைக் பாதி தூரம் சென்றவுடன் அந்த நபர் இனிய சுதனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சீயோன் புரத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. அவரை போலிசார் கைது செய்தனர். 

Similar News

News February 13, 2026

குமரி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1) காலிப்பணியிடங்கள்-419

2) வயது வரம்பு- 22-40

3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.

4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

5) கடைசி நாள்: 26.2.2026

6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும்.

வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 13, 2026

மகா சிவராத்திரி சிறப்பு ரயில் அறிவிப்பு..!

image

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று (பிப்.13) இரவு 23:45-க்கு புறப்பட்டு (பிப்.14) மதியம் 1:00 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் வகையில் (வ. எண் 06135) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குமரியில் இருந்து (பிப்.16) இரவு 21:35-க்கு புறப்பட்டு (பிப்.17) காலை 10:15 க்கு சென்னை வந்தடையும் வகையில் (வ. எண் 06136) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

குமரி: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

image

நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் கோமு (52). இவர் கோயிலுக்கு சென்று விட்டு நாகராஜன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருப்பதிசாரம் டோல்கேட் அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கோமு கீழே விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!