News July 17, 2024

கன்னியாகுமரியில் இரண்டாவது நாளாக கடும் கடல் சீற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 2ஆவது நாளாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. குளச்சல், முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்தன. இதனையடுத்து, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 6,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Similar News

News November 9, 2025

குமரி: விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

image

திற்பரப்பு பழைய பாலம் சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). கூலித் தொழிலாளியான இவர் நவ.5-ம் தேதி வீட்டு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இவர் மீது மோதியுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வராஜ் சிகிட்சை பலனளிக்காமல் இன்று (நவ.8) உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2025

குமரி: இளம் பெண் தற்கொலை

image

கீழமறவன் குடியிருப்பு  டெம்போ டிரைவர் செல்வசரண் மற்றும் ரேஷ்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்தனர். கடந்த நவ.6ம்தேதி  கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ரேஷ்மா ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாருக்கு செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து கோட்டார் போலீசார் விசாரணை. 

News November 8, 2025

குமரி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!