News September 12, 2025

கனிம வளங்கள் குறித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

image

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும் (critical and strategic minerals), 6 வகையான அணுக் கனிமங்களையும் (atomic minerals) அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலேயே மேற்கொள்ளலாம் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News September 13, 2025

குமரி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் 13.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி – மதியம் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2025

கன்னியாகுமரி மக்களே இந்த பக்கம் போகாதீங்க

image

கன்னியாகுமரி மாவட்டம், காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது. எனவே கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வாகனங்கள் காவல் கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் அணுகு சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

News September 12, 2025

குமரி: தண்ணீரில் இழுத்து செல்லபட்ட தொழிலாளி

image

சிதறால் வட்ட விளையை சேர்ந்தவர் சத்யமணி (54) இவர் தாமிரபரணி ஆற்றில் நேற்று குளிக்க சென்றார். அப்போது அவரை தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது. இதனால் அவர் புதர்களை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

error: Content is protected !!