News January 15, 2026

கனவில் கேட்ட ஆண்டாள்.. 45 சவரனை கொடுத்த பெண்!

image

நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை தரிசித்தவர்கள், ‘நகைகள் புதுசா இருக்கே’ என கவனித்திருக்கலாம். இதற்கு ஒரு பெண்ணின் பக்தியே காரணம். சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் தோன்றி ஆண்டாள், ‘உன் நகைகளை தா’ என கேட்டாராம். கொஞ்சமும் யோசிக்காத ஜோதிலட்சுமி 45 சவரன் நகைகளை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்க, அதை கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அந்த நகைகளை அணிந்தபடி, ஆண்டாள் உற்சவத்திற்கு புறப்பட்டுள்ளார்.

Similar News

News January 26, 2026

குடியரசு தினம் ஏன் ஜன.26ல் கொண்டாடப்படுகிறது?

image

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றாலும், அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வர 1950 வரை ஆனது. 1930 ஜனவரி 26 அன்றுதான் இந்திய தேசிய காங்கிரஸ் ’முழு சுதந்திரம்’ தீர்மானத்தை முதன்முதலில் அறிவித்தது. அந்த நாளைக் கௌரவிக்கவே குடியரசு தினம் ஜன.26-ல் கொண்டாடப்படுகிறது. மேலும் டெல்லியில் இன்று தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம், ஜன.29-ம் தேதி மாலை நடைபெறும் கோலாகல இசை அணிவகுப்புடன் தான் நிறைவடையும்.

News January 26, 2026

தமிழகத்துக்கு விஜய் தேவையில்லாதவர்: KTR

image

அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்திருந்த விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். வேலை செய்யும் மனிதனுக்கு 6 விரல்கள் தேவையில்லை; 5 விரல்கள் போதுமானது என்றும், அந்த ஆறாவது விரல் போல தமிழகத்திற்கு விஜய் தேவையில்லாதவர் எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் தான் நிற்கும்; இதர கட்சிகள் எல்லாம் கரைந்துவிடும் எனப் பேசினார்.

News January 26, 2026

ஆக.15, ஜன.26: கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம்!

image

*சுதந்திர தினத்தில் கீழிருந்து கொடி மேலே சென்று, முடிச்சு திறந்து பறக்கவிடப்படுவது ‘கொடியேற்றம்’ *குடியரசு தினத்தில் கம்பத்தின் உச்சியில் இருக்கும் கொடி அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படுவது ‘கொடியை பறக்கவிடுதல்’ *சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியை பறக்கவிடுவார்கள் *சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையிலும், குடியரசு தினத்தில் ராஜ்பாத்திலும் கொடி பறக்கவிடப்படும்.

error: Content is protected !!