News October 29, 2024
கனரா வங்கியை ஆரணி எம்பி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரத்தில் புதியதாக துவங்கி உள்ள கனரா வங்கியை நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் MP அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து துவக்கி வைத்தார்.உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S.அம்பேத்குமார் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 22, 2025
தி.மலை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 8th,10th,12th, ITI, பாலிடெக்னிக் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 04175-233381 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
“திருவண்ணாமலையில் கூட்டுறவு தேர்வுக்கு இலவச பயிற்சி”

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கூட்டுறவு தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு டிப்ளமோ/பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலையில் 109 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் நாளை (ஆகஸ்ட் 23) க்குள் Google Form https://forms.gle/PpAovGywpLNUy4JG9 மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.