News December 6, 2024
கனமழை வெள்ளத்துக்கு இனி எந்த பகுதியும் தப்பாது?

பருவமழை காலத்தில் பெய்யும் கனமழையால் ஏற்படும் வெள்ளத்துக்கு வழக்கமாக சென்னையும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுமே பாதிக்கப்படும். இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த மாவட்ட மக்கள் பீதியில் இருப்பார்கள். ஆனால் இந்த மழைகாலம், தமிழகத்தின் அனைத்து பகுதியையும் ஒருவழி பண்ணிவிட்டது. கோவை, திருப்பூர், மதுரை, சென்னை, விழுப்புரம், கடலூர், ஈரோடு என்று சுற்றி வந்து அனைத்து பகுதியிலும் கதகளி ஆடிவிட்டது.
Similar News
News April 29, 2025
அரசியல் பிரமுகரின் மகள் சடலமாக மீட்பு

பஞ்சாப் AAP பிரமுகர் தேவேந்திர் ஷைனியின் மகள் வன்ஷிகா ஷைனி (21), கனடாவின் ஒட்டாவா பீச் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2023-ல் கனடா சென்ற அவர், கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். ஏப்.25-ல் வாடகைக்கு வீடு பார்ப்பதாக கூறிச் சென்றதாக சக தோழிகள் கூறியுள்ளனர். தனது மகளின் சடலத்தை தாயகம் கொண்டுவர மத்திய அரசுக்கு தேவேந்திர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News April 29, 2025
சுக்கிரன் பெயர்ச்சி: யோகம் அடிக்கும் 3 ராசிகள்

சுக்கிரன் கடந்த ஏப்.26-ம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். இதனால் அதிக நன்மைகள் பெறும் 3 ராசிகள்: *மகரம்- தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள் வலுப்படும் *கும்பம்: முதலீடுகள் பெருகும். குடும்ப உறவு மேம்படும். அலுவலக அந்தஸ்து உயரும் *மீனம்: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வணிகத்தில் முன்னேற்றம். ஆரோக்கியம் சிறக்கும்.
News April 29, 2025
யார் இந்த பி.ஆர்.கவாய்?

SC-ன் புதிய தலைமை நீதிபதியாக B.R.கவாய் பதவியேற்கவுள்ளார். 1960-ல் மகாராஷ்டிராவில் பிறந்த இவர், பம்பாய் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். பின், 2019-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார். இவரது குடும்பத்தினர் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்திற்கு மாறியவர்கள். K.G.பாலகிருஷ்ணனுக்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்கும் 2-வது தலித் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.