News January 26, 2026
கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இரவில் சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், தி.மலை, நீலகிரி, மதுரை, ராணிப்பேட்டையில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காலையும் மழை தொடர்ந்தால், விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News February 9, 2026
மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News February 9, 2026
ரீசார்ஜ் பண்ணாமலே போன் கால் செய்யலாம் தெரியுமா…

போனில் ரீசார்ஜ் இல்லை, உடனே யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால், இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. ஆனா, ஒரு கண்டிஷன், இதற்கு போனில் WiFi அழைப்பு வசதி இருக்க வேண்டும். *Settings-> Network & Internet-ஐ கிளிக் பண்ணுங்க *அதில், SIM card & Mobile network-ஐ தேர்ந்தெடுக்கவும் *WiFi Calling dongle-ஐ கிளிக் செய்து, எந்த SIM என்பதை கிளிக் செய்து, WiFi calling-ஐ ஆன் செய்தால் போதும். ஈசியாக போன் பேசலாம்.
News February 9, 2026
கூட்டணியில் சேர தூது.. சசிகலா வைத்த டிமாண்ட்!

NDA-வில் சேர சசிகலா விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், EPS தனக்கு நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, தன்னுடன் இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன், Ex அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என சசிகலா கேட்டாராம். இதனை கேட்ட EPS, முதலில் ஆதரவு கடிதம் கொடுத்தால் சீட்டு பற்றி பேசலாம் என கூறிவிட்டாராம்.


