News December 19, 2024
கனமழையால் 5,100 ஏக்கர் பயிர்கள் சேதம்

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் வந்தவாசி மற்றும் தெள்ளார் வட்டாரங்களில் பலத்த பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தவாசி வட்டாரத்தில் 1,700 ஏக்கர் நெல், 65 ஏக்கர் உளுந்து, 20 ஏக்கர் கரும்பு, 50 ஏக்கர் மணில்லா மற்றும் தெள்ளார் வட்டாரத்தில் 2,000 ஏக்கர் நெல், 30 ஏக்கர் கரும்பு, 375 ஏக்கர் உளுந்து, 260 ஏக்கர் மணிலா பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
Similar News
News March 7, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
தி.மலையில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

தி.மலை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News March 6, 2026
தி.மலை: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

தி.மலை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!


