News May 23, 2024

கனமழையால் சாலையில் விழுந்த மரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதலை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நாகர்கோவில் அருகே ராமன்புதூர் பகுதியிலுள்ள அரசு கலை கல்லூரி அருகில் சாலையில் மரம் விழுந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Similar News

News November 5, 2025

குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News November 5, 2025

குமரி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

✅கூட்டு பட்டா,

✅விற்பனை சான்றிதழ்,

✅நில வரைபடம்,

✅சொத்து வரி ரசீது,

✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News November 5, 2025

குமரி: அலைபாயுதே பாணியில் ஏமாற்றிய பெண்

image

ராமன்துறையை சேர்ந்த சஜினும்(35) – முள்ளூர்துறையை சேர்ந்த பிளஸ்சியும்(23) காதலித்து  2023-ல் ரகசியமாக திருமணம் செய்து அதை மறைத்து வாழ்ந்தனர். பெற்றோர் வீட்டில் இருந்த பிளஸ்சியை ரூ.12 லட்சம் செலவு செய்து கத்தாரில் வேலை செய்து சஜின் படிக்க வைத்தார். தற்போது முறைப்படி திருமணம் செய்ய பிளஸ்சி சம்மதிக்காமல் ஏமாற்றியதால் அவர் மீது குழித்துறை கோர்ட்டில் சஜின் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

error: Content is protected !!