News May 23, 2024
கனமழையால் சாலையில் விழுந்த மரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதலை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நாகர்கோவில் அருகே ராமன்புதூர் பகுதியிலுள்ள அரசு கலை கல்லூரி அருகில் சாலையில் மரம் விழுந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
Similar News
News March 4, 2026
குமரி: நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு.!

சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (27). இவர் வெள்ளாங்கோடு முந்திரி ஆலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அவர் தங்கச் சங்கிலி பிடித்துக் கொள்ளவே, ஆறரை பவுன் கொள்ளையர்கள் கையில் சிக்கிக் கொண்டது. இது குறித்து அருமனை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 4, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.
News March 3, 2026
குமரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


