News June 7, 2024
கந்துவட்டி வழக்கில் முக்கிய பிரமுகர் கைது

சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்த தீபலட்சுமி, லட்சுமி உள்ளிட்ட 3 பெண் பட்டாசு தொழிலாளிகள் அதே பகுதியில் வசிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஈஸ்வர பாண்டியிடம் வட்டி கடன் பெற்றனர். பணம் செலுத்த தாமதமானதால் அவர்களது வீட்டிற்கு சென்ற ஈஸ்வர பாண்டியன் கடன் பெற்ற பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரில் கந்துவட்டி கொடுமை செய்ததாக நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News August 23, 2025
விருதுநகரில் ரூ.5.62 லட்சம் மதிப்புள்ள கந்தகம் பறிமுதல்

பட்டம்புதூர் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் தடையில்லா சான்று பெறாமல் 16 டன் கந்தகம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து லாரி ஓட்டுனரிடம் விசாரித்த போது அப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. ரூ.5.62 லட்சம் மதிப்புடைய கந்தகத்தை தடையில்லா சான்று பெறாமல் கொண்டு வந்த லாரி ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
News August 23, 2025
விருதுநகர் தவெக நிர்வாகி மறைவுக்கு விஜய் இரங்கல்

தவெக தலைவர் விஜய் இரங்கல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளிட்டுள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து K.காளிராஜ் உட்பட மூவர் மதுரை மாநாட்டில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் கழகத்திற்காக செய்த பணி என்றும் நினைவில் நிலைக்கும். குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம். அவர்களது குடும்பங்களுக்கு கழகம் என்றும் துணையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
News August 23, 2025
விருதுநகரில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. ஷேர் பண்ணுங்க.