News November 27, 2025

கந்தம்பாளையம் அருகே மின் கம்பத்தில் மோதி பலி!

image

நாமக்கல் கந்தம்பாளையம் அருகே மேட்டாம்பாறையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மாரிசாமி (30). நேற்று முன்தினம் திருச்செங்கோட்டில் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, கந்தம்பாளையம் அருகே செல்லப் பம்பாளையத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சோலார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News December 1, 2025

நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)

News December 1, 2025

நாமக்கல்லில் வாலிபர் திடீர் தற்கொலை!

image

நாமக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் வசிக்கும் சகுந்தலாவின் மகன் யுவராஜ் (29), கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த அவர் தனது தாயாரை தொடர்பு கொண்டு விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தார். உடனடியாக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மிமீ மழை பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர்-1ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1.20 மிமீ, கொல்லிமலை செம்மேட்டில் 5.50 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!