News August 20, 2024

கத்தி குத்து சம்பவம் 8 பேர் கைது

image

திருப்பூர், பல்லடத்தில் நேற்று இரவு தமிழ்ச்செல்வன், டைமண்ட் இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தற்செயலாக வாகனத்திற்கு வழிவிடுவது சம்மந்தமாக ஏற்பட்டது தான். மேலும், இது தொடர்பாக பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 9, 2025

திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 9, 2025

திருப்பூரில் கைது! ஏன் தெரியுமா?

image

அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி, கணேசபுரம் வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் படி நேற்று முன்தினம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அதில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

News November 9, 2025

திருப்பூரில் இங்கெல்லாம் மின்தடை

image

உடுமலை இந்திரா நகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை நவ.10-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதூர். ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

error: Content is protected !!