News November 19, 2025

கண்மூடித்தனமாக AI-ஐ நம்பவேண்டாம்: சுந்தர் பிச்சை

image

AI-ல் தவறான தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். AI-ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என தெரிவித்த அவர், தகவலை வேறு தளத்தில் சரிபார்ப்பதே சிறந்தது எனவும் கூறியுள்ளார். அதேபோல் AI முதலீடு என்பது bubble வெடிப்பது போல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிபிசி பேட்டியில் கேட்டுக்கொண்டார்.

Similar News

News November 19, 2025

காட்டாட்சி முடிவுக்கு வரும்: நயினார் நாகேந்திரன்

image

<<18327587>>ராமேஸ்வரத்தில்<<>> பள்ளி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை என்று விமர்சித்துள்ள அவர், பெண்களுக்கெதிரான ஆட்சி இனி தமிழகத்தில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார். 2026-ல் திமுகவின் காட்டாட்சி முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 19, 2025

பொய் சொல்லும் CM ஸ்டாலின்: அன்புமணி

image

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய் கூறுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 5 ஆண்டுகளில் 5% முதலீடுகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறிய அவர், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பயந்து ஓடுவதாக விமர்சித்துள்ளார். மேலும், பொய்யை தவிர CM-க்கு வேற எதுவும் தெரியவில்லை என்றும் போதிய முதலீடுகள் இல்லாததால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் எனவும் சாடினார்.

News November 19, 2025

BREAKING: வங்கி கணக்கில் ₹2,000 வந்தது.. செக் பண்ணுங்க

image

கோவை கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை PM மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2,000-ஐ மோடி விடுவித்தார். இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த தவணையை பெற தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையையும் (₹4,000) சேர்த்து வழங்க வழிவகை செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!