News January 11, 2025
கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தில் செல்ல பராமரிப்பு பணி காரணமாக வரும் 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு பாறை மட்டுமே செல்ல முடியும் என இன்று(ஜன.11) அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.*தடை செய்யப்பட்டதை நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
Similar News
News January 28, 2026
குமரியில் கேரளா வியாபாரி பலி

திருவனந்தபுரம் அருகே மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (78). இவர் மரத்தினாலான சிறு பொருட்களை குமரிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென கன்னியாகுமரிக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக குமரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
குமரி: பழைய வாகனம் வாங்கும் போது இது அவசியம் – எஸ்.பி

குற்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க பயன்படுத்திய வாகனங்களை(Second Hand) வாங்கும்போதும், விற்கும்போதும் ஆவணங்களில் பெயர் மாற்றம் அவசியம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பயன்படுத்திய வாகனங்கள் வாங்கும் போது 14 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் சட்ட மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News January 27, 2026
குமரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க!


