News August 31, 2024
கண்ணமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார். மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்பில் இருப்பதாக வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு இவர் மீது பல்வேறு புகார்கள் மாவட்ட காவல்துறைக்கு சென்றுள்ளது. எனவே வேலூர் சரக டி.ஐ.ஜி. தேவராணி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் திருவண்ணாமலை மாவட்ட போலீசார் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. முதல் நாள் மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் தலைமையிலும், இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையிலும் நடைபெற உள்ளது. தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஒளவை அருள் சிறப்புரை பேசுகிறார்.
News August 24, 2025
தி.மலை வருவாய்த்துறை சங்கங்களின் கோரிக்கை மாநாடு

திருவண்ணாமலையில் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை மாநாடு (ஆக. 23) நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊழியர்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி பளுவை குறைத்தல், தனி ஊதியம் வழங்குதல், வெளிமுகமை, தொகுப்பூதிய நியமனத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
News August 24, 2025
தி.மலை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

தி.மலை மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க