News February 16, 2025
கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி பிரபாகர் மற்றும் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவர் ஓட்டிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் பிரபாகர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
Similar News
News November 5, 2025
திண்டுக்கல்;போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

தற்போது அவசர உதவிக்கு 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம். பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு – 1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு – 181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால் – 1094 இந்த முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
திண்டுக்கல் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 5) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் குறைகள், மனுக்கள் பெறப்படும். பழனி நகராட்சியில் உடுமலை ஆயுரா வைஸ்யர் மடம், நிலக்கோட்டை வட்டத்தில் குல்லிசெட்டிபட்டி பொம்முச்சாமி திருமண மஹால், ரெட்டியார்சத்திரம் வட்டத்தில் அனுமந்தராயன் கோட்டை லொயோலா மண்டபம், சாணார்பட்டி வட்டத்தில் வேம்பார்பட்டி அம்மா மண்டபத்தில் நடைபெறுகிறது.
News November 4, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள காவல் உதவி எண்களை அழைத்து பயன்பெறுமாறு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


