News August 22, 2024
கண்டிபாளையத்துக்கு பரிசல் போக்குவரத்து தொடக்கம்

கொடுமுடி அடுத்துள்ள ஊஞ்சலூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் கண்டிபாளையத்துக்கு காவேரி ஆற்றில் பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஏழு மாதங்களாக காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால் பரிசல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று ஊஞ்சலூரில் இருந்து கண்டிபாளையத்துக்கு பரிசல் பயணம் மீண்டும் தொடங்கி உள்ளது.
Similar News
News November 15, 2025
நாமக்கல் அருகே சோகம் ஓட்டுநர் பலி

நாமக்கல் அருகே அமைந்துள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு இவரை காணவில்லை என அவருடைய மகள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார் இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் சமையல் அறையில் போதை தலைக்கேறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார் இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 15, 2025
நாமக்கல் கிட்னி விற்பனை வழக்கில் திடீர் திருப்பம்!

கிட்னி விற்பனை வழக்கில் புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டாலின் மோகன் இருவரையும் சிறப்பு புலனாய்வு குழு வினர் கடந்த, 11ம் தேதி பள்ளிப்பாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் உள்ள பயணியர் விடுதியில் வைத்து, கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில், கிட்னி புரோக்கர்கள் தெரிவித்த தகவல் படி, அன்னை சத்யா நகரை சேர்ந்த முத்துசாமி, 45, என்ற கிட்னி புரோக்கரை சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று கைது செய்தனர்.
News November 15, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


