News July 25, 2024
கணையாறு ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு

உளுந்தூர் பேட்டையில் 155 ஏக்கர் பரப்பளவுள்ள கணையாறு ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கணையாறு ஏரியின் பரப்பளவை அளவீடு செய்து எல்லை வரையரை செய்யவும் வருவாய் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளது. காவல்துறை உதவியுடன் ஏரி ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, 12 வாரத்தில் ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வரவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News May 8, 2025
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுங்கள்

நான் முதல்வன் திட்டம் மூலம், ஒன்றிய அரசின் SSC, RRB மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் naanmudhalvan.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம். நுழைவு தேர்வு மூலம், தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசவாக வழங்கப்படும். விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி நாளாகும்.
News May 8, 2025
கள்ளக்குறிச்சி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் எஸ்.பி. கேட்டறிந்தார்.