News July 25, 2024
கணையாறு ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு

உளுந்தூர் பேட்டையில் 155 ஏக்கர் பரப்பளவுள்ள கணையாறு ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கணையாறு ஏரியின் பரப்பளவை அளவீடு செய்து எல்லை வரையரை செய்யவும் வருவாய் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளது. காவல்துறை உதவியுடன் ஏரி ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, 12 வாரத்தில் ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வரவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
கள்ளக்குறிச்சியில் சண்டையை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்!

திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் நேற்று (ஜூலை 10) சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த சண்டையை தடுக்க சென்ற ரமேஷ் என்பவரையும் விஜய் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் விஜய் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News July 11, 2025
கள்ளக்குறிச்சியில் கல்லை டிஜிட்டல் டிரைவ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தும் நோக்கத்தில், “கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று (ஜூலை 10) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News July 11, 2025
திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சியில் சுமார் 3,413 உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோவிலூர் நகராட்சியில் ஜூலை 17 ஆம் தேதியன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.