News February 16, 2025
கணினி மூலம் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்

பூந்தமல்லயில் உள்ள அரசு பார்வைத்திறன் குறைபாடு பள்ளியில், 18 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வுக்கு தயார். பாரம்பரிய முறையில், ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுதியும் தேர்வு நடைபெறும். ஆனந்த் என்ற மாணவர், கணினி மூலம் தனியாக எழுதி தமிழகத்திலேயே முதலாவதாக சாதனை படைத்துள்ளார். இதற்காக, அவர் 2 ஆண்டுகள் கடின பயிற்சி பெற்றார். முன்பு, மத்திய பாடத்திட்டத்தில் 2 மாணவர்கள் இவ்வாறு தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
திருவள்ளூரில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
திருவள்ளூர் கலெக்டர் உத்தரவிட்டார்!

திருவள்ளூர்: காக்களூர் ஏரி பகுதியில் நேற்று(மார்ச்.2) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ’நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.
News March 3, 2026
திருவள்ளூர் எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு!

திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விருப்ப மனு பெறபட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் தொகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் நேற்று(மார்ச் 2) திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சென்று விருப்ப மனு அளித்தார். உடன் திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


