News April 2, 2024
கணித தேர்வில் 1011 பேர் “ஆப்சென்ட்”

நேற்று நடந்த 10ம் வகுப்பு கணிதத்தேர்வு மதுரை மாவட்டத்தில் 145 மையங்களில் நடைபெற்றது. 488 பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரத்து 37 மாணவர்கள், 18 ஆயி ரத்து 317 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 522 மாணவர்கள், 489 மாணவிகள் என மொத்தம் 1011 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 19, 2025
மதுரையில் மெட்ரோ திட்டம் நிறுத்தம் – மெட்ரோ விளக்கம்.!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்தியஅரசு நிராகரித்ததாக வெளியான தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது, “மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு இல்லை. திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ சார்பில் பதில் அளிக்கப்படும். மேலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மக்கள்தொகை அடிப்படையில் நிறுத்த வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளது.
News November 19, 2025
மதுரை மாவட்டம் – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (18.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


