News April 2, 2024

கணித தேர்வில் 1011 பேர் “ஆப்சென்ட்”

image

நேற்று நடந்த 10ம் வகுப்பு கணிதத்தேர்வு மதுரை மாவட்டத்தில் 145 மையங்களில் நடைபெற்றது. 488 பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரத்து 37 மாணவர்கள், 18 ஆயி ரத்து 317 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 522 மாணவர்கள், 489 மாணவிகள் என மொத்தம் 1011 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News

News February 14, 2026

மதுரை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மதுரை மக்களே; இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

மதுரை: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

image

மதுரை கோச்சடையை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ரம்யா (19) தனியார் கல்லூரி ஒன்றில் 2 ஆம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

News February 14, 2026

மதுரை மாநகராட்சியில் குடிநீர் நிறுத்தம்!

image

மதுரை மாநகராட்சி முக்கிய இடங்களில், குடிநீர் பைப் லைன்களில் புதிய வால்வுகள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால், வரும் பிப்.17 & பிப்.18. ஆகிய 2 நாட்களுக்கு, வைகை தென்கரை வார்டு எண்: 44 முதல் 70 வரையும், 76, 77, 85, 89 ஆகிய வார்டு பகுதிகளிலும் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *SHARE பண்ணுங்க.

error: Content is protected !!