News October 9, 2024

கணவர் வீட்டை சூறையாடிய மனைவி

image

லாஸ்பேட்டை கருவடிக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அப்துர் ரகுமான். அவரது மனைவி ஹசினா பேகம். இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஹசினாபேகம் மற்றும் அவரது தாய் உட்பட 5 பேர் , அப்துர் ரகுமான் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். போலீசார் நேற்று ஹசினா பேகம், அவரது தாய் உட்பட 5 பேர் மீது, வழக்குபதிந்தனர்.

Similar News

News December 11, 2025

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – முதல்வர் மரியாதை

image

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவர் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News December 11, 2025

புதுவை: போலி மருந்து வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்

image

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளர் ராஜா மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய விவேக் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக இருவரும் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News December 11, 2025

புதுவை: போலி மருந்து வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்

image

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளர் ராஜா மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய விவேக் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக இருவரும் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!