News January 24, 2026
கணவரை பங்கு போடுவதில் மனைவிகளுக்குள் போட்டி

ஒரு மனைவியை வைத்து சமாளிப்பதே இங்கு பலருக்கும் சவாலாக உள்ள நிலையில், உ.பி.,யில் 2 மனைவிகளை கட்டியவரின் கதை வேற லெவல். `எம் புருசன், எனக்கு தான்’ என 2 மனைவிகளுக்குள் குடுமிபிடி சண்டை வந்தது. இதுக்கு என்னடா தீர்வுன்னு பஞ்சாயத்துக்கு 2 பேரும் போக, அங்கு சொன்ன தீர்ப்புதான் அல்டிமேட். வாரத்தின் 3 நாள்கள் இங்கும், 3 நாள்கள் அங்கும் இருக்க வேண்டும் எனவும், Sunday லீவ் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
Similar News
News February 10, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி

நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் தர்ஷிகா (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 – ம் வகுப்பு படித்து வந்தார். இவர் செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தர்ஷிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*
News February 10, 2026
FLASH: ஆட்டோ, கால் டாக்ஸி ஸ்டிரைக் அறிவிப்பு!

எரிபொருள், பராமரிப்பு செலவு அதிகரிப்பு இருந்தும், ஆட்டோ கட்டணம் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என புகார் எழுந்தது. பின்னர், இதுதொடர்பாக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆட்டோ, கால் டாக்ஸி ஊழியர்கள், உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் காஞ்சி, செங்கை, திருவள்ளூரிலும் சேவைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
News February 10, 2026
அரசுப் பள்ளிகள் விஷப் பூச்சிகளின் கூடாரம்: நயினார்

நாமக்கல்லில் அரசு பள்ளி <<19093789>>மாணவி <<>>விஷப்பூச்சி கடித்து பலியான செய்தி மனதை பதைபதைக்கச் செய்வதாக நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார். ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தானே, விஷப்பூச்சிகளும் பாம்புகளும் ஊர்ந்தால் என்ன, என்று திமுக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் திமுக அரசைத் தமிழக மக்கள் துரத்தியடிப்பர் எனவும் கூறியுள்ளார்.


