News November 7, 2024

கணவரைக் கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை

image

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிகாமணி (70) என்பவரை அவரது மனைவி பரமேஸ்வரி மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை செய்தார். இவ்வழக்கில் விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், பரமேஸ்வரி என்பவர் குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூ.500மும்,  அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Similar News

News October 24, 2025

விருதுநகர்: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

விருதுநகர் மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 24, 2025

ஸ்ரீவி: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு சிறை

image

அருப்புக்கோட்டை பகுடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியின் தந்தை மற்றும் குற்றத்தை மறைத்ததாக தாயையும் கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.தாய் விடுவிப்பு.

News October 24, 2025

சிவகாசியில் 2 நாளில் 140 டன் குப்பைகள் அகற்றம்

image

சிவகாசி மாநகராட்சியில் தீபாவளி முன்னிட்டு உள்ளூரிலேயே பட்டாசு தயாரிக்கப்படுவதால் மக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். மாநகராட்சியில் சாதாரணமாக ஒரு நாளில் 50 முதல் 52 டன் குப்பையில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் கடந்த 2 நாட்களில் சுமார் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!