News February 25, 2025
கணவன் வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த மனைவி பலி

கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் காந்திநகரை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் அவரது மனைவி தவமணி(38) மற்றும் மூன்று குழந்தைகளை கடந்த 19-ல் அரிவாளால் வெட்டினார். இதில் இரு குழந்தைகள் உயிர் இழந்தனர். மனைவி தவமணி மற்றும் மற்றொரு குழந்தை ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தவமணி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 25, 2025
சேலத்தில் முதல்வருக்கு புத்தகம் வழங்கல்

பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன் அப்பாதுரை ‘மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்’ புத்தகத்தை வழங்கி வரவேற்றார்.
News February 25, 2025
சேலத்தில் ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வின் இத்திருமணம் விழாவில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.25) சேலம் வந்த முதலமைச்சர் திருமண தம்பதிகளை மரம் கொத்து கொடுத்து வாழ்த்தினார். உடன் அருள் எம்எல்ஏ, சதாசிவம் எம்எல்ஏ மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இருந்தனர்.
News February 25, 2025
சேலம் விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

“வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. இணைந்து போட்டியிட வேண்டும்; செயல்பட வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை” என சேலம் விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.