News April 10, 2025

கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர் 

image

தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் காக்கும் வகையில் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு உதவி தொகை ரூ.12,000 வீதம் இரு தவணையாக ரூ.25,000 (ஆண்டுக்கு மட்டும்) வழங்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் ரோகு விற்பனை

image

சிவகங்கை மாவட்ட பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் ரோகு மற்றும் மிர்கால் மீன்விரலிகள் கையிருப்பில் உள்ளன. மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய் குத்தகையாளர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இவற்றை வாங்கலாம். தொடர்புக்கு: மீன்வள ஆய்வாளர் – 9384824553, மீன்வள மேற்பார்வையாளர் தரம் II – 9790656919. மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் அளித்துள்ளார்.

News October 17, 2025

ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு தடை

image

தீபாவளி விடுமுறைக்காக ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் போது பட்டாசுகள், வெடி பொருட்கள், மண்ணெண்ணெய், சிலிண்டர் போன்ற தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ரயில்வே காவல் படை மோப்ப நாய்களுடன் சோதனை நடத்துகின்றனர்.

News October 17, 2025

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த முக்கிய உத்தரவு

image

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2024- 2025 ஆண்டிற்கான ஊக்கத்தொகை மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவின் படி ( C, D) பிரிவு ஊழியர்கள் மற்றும் தகுதியுடைய கடை பணியாளர்களுக்கும் தீபாவளி போனசாக 20% வழங்கப்படும் இதன் மூலம் 24816 தகுதியுடைய ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!