News October 8, 2024
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளை வழங்கல்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் 6 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை தலா ரூ.1,200 பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் சாந்தி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News July 10, 2025
ஏலகிரியில் வானொலி நிலையம் தொடங்கப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் வானொலி நிலையம் தொடங்கப்படும் என கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெகத்ரட்சகன் கோடை விழா நிகழ்ச்சியின் போது அறிவித்தார். ஆனால் இன்று வரை ஏலகிரி மலையில் வானொலி நிலையம் தொடங்கப்படாமல் உள்ளது. ஆகவே எப்போது வானொலி நிலையம் தொடங்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
News July 10, 2025
திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 09.07.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோவிந்தராசு., ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 55 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
News July 9, 2025
சரக்கு வாகனம் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.